தமிழக செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

நயினார்கோவில் அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

நயினார்கோவில், 

இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அகில இந்திய பெடரல் பிளாக் கட்சி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நயினார்கோவில் அருகே உள்ள பாண்டியூர் கிராமத்தில் நடைபெற்றது. முகாம் கண் டாக்டர்கள் மேகனா கிராந்தி, மகேஸ்வரர் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் பெடரல் பிளாக் மாவட்ட செயலாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் முருகன், ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய துணைச்செயலாளர் செல்வராஜ், மண்டப ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, பி.கொடிக்குளம் ஆர்.கே.ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இலவச கண் மருத்துவ முகாமில் 340 பேர் கலந்து கொண்டு அதில் 39 பேர் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு