தமிழக செய்திகள்

இலவச கண் சிகிச்சை முகாம்

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையும், ஆரணி ஹோஸ்ட் அரிமா சங்கமும் இணைந்து ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள கார்நேசன் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தியது. 

சங்க தலைவர் டி.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத், பொருளாளர் வி.சதீஷ், வருமாண்டு தலைவர் எஸ்.பி.சங்கர்ராம், மாவட்ட தலைவர் என்.சீனிவாசன், வட்டாரத் தலைவர் எல்.சுகுமார், இயக்குனர் ஏ.தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கண் பார்வை சம்பந்தமாக கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்ணில் நீர் வடிதல், மாலைக்கண் நோய், ஒற்றைத் தலைவலி, கண்ணில் புரை நீக்குதல் சம்பந்தமாக 427 பேர் இலவச கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டனர்.

அதில் கண்ணில் விழிலென்ஸ் பொருத்த 82 பேரை தேர்வு செய்யப்பட்டு புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர்.

முகாமில் சங்க உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு