தமிழக செய்திகள்

300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

தினத்தந்தி

காரியாபட்டி,

300 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

ஆடுகள் வழங்கும் விழா

விருதுநகர் மாவட்டம் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஏழ்மை நிலையில் உள்ள கணவரை இழந்த, கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்துடன் ஆடுகள் வழங்கும் விழா தோணுகால், நரிக்குடி ஆகிய இடங்களில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு 300 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பொருளாதாரத்தை மேம்படுத்த 5 ஆடுகளை ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய நபர்களுக்கு முழுமையாக செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதாரம் பெருகும்

வீட்டில் பெண்பிள்ளை பிறந்தால் நமக்கு வருத்தம் ஏற்படுகிறது. ஆனால் ஆடு பெண்குட்டி போட்டால் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். கடந்தகாலங்களில் ஆடுகள் மூலம் வருமானத்தை வைத்து கோவில்களில் விளக்கு ஏற்றப்பட்டது.

ஆனால் இன்று வீடுகளில் விளக்கேற்ற ஆடு வழங்கப்படுகிறது. ஆடுகள் பெருகினால் வீட்டில் பொருளாதாரம் பெருகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், யூனியன் தலைவர்கள் முத்துமாரி, பொன்னுத்தம்பி, காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், போஸ் தேவர், கண்ணன், மாவட்ட கவுன்சிலர்கள் தங்கதமிழ்வாணன், கமலி பாரதி, சிவக்குமார், யூனியன் துணைத்தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு