மண்மங்கலம் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கறவைமாடு வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரடியாக நாள மறுநாள் காலை 10.30 மணிக்குள் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு வந்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என பயிற்சி மையத்தின் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.