தமிழக செய்திகள்

சென்னை சாஸ்திரிபவனில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி

சென்னை சாஸ்திரிபவனில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

தினத்தந்தி

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்னை சாஸ்திரிபவனில் 21 நாள் இலவச யோகா பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியோடு பணியாற்றும் வகையில் உணவு இடைவெளியின்போது இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் டாக்டர்கள் யோகா பயிற்சி அளிக்கிறார்கள்.

ஆயுஷ் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 நிமிட யோகா, ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் போன்றவை யோகா நெறிமுறை செயலி வழியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த யோகா பயிற்சி முகாம் ஏற்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை