தமிழக செய்திகள்

கடலூரில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாள் சிலை: முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்

அஞ்சலை அம்மாளுக்கு 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தி பட்டம் வழங்கினார்.

தினத்தந்தி

சென்னை,

கடலூர் காந்தியம்மாள் பூங்காவில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலை அம்மாளின் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது. இவர் தனது வயிற்றில் கருவைச் சுமந்த நிலையில் விடுதலைக்காக போராடி சிறை சென்றவர் ஆவார். அஞ்சலை அம்மாளுக்கு 'தென்னாட்டின் ஜான்சி ராணி' என்று மகாத்மா காந்தி பட்டம் வழங்கினார்.

அஞ்சலை அம்மாளுக்கு சிலை அமைக்கப்படும் என தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் முடிவடைந்து இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலி காட்சி வாயிலாக அஞ்சலை அம்மாளின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்