தமிழக செய்திகள்

வாலிபரை தாக்கிய நண்பர்கள்

வாலிபரை தாக்கிய நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி விமானநிலையம் பகுதியை சேர்ந்தவர் ஞாசசேகரன் (வயது 34). இவர் செம்பட்டு பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய நண்பர்கள் 4 பேர் அவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்ததால், அவரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் விமானநிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.