தமிழக செய்திகள்

கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை

கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்குச் சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை

கடந்த 2 தினங்களாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்னும் சில நாட்களுக்கு மழை இருக்கும் என்றும் 7-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பலத்த மழை இருக்கும் என்றும் வானிலை மையத்தால், ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது

இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற ஆயிரம் மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை . புயல் குறித்து அரசு விடுத்த எச்சரிக்கை மீனவர்களுக்கு போய் சேராததால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. ராணுவம், கப்பல் படை, மீன்வளத்துறை மூலம் தகவல் அனுப்ப நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்