தமிழக செய்திகள்

நாளை முழு ஊரடங்கு: பெட்ரோல் பங்குகள் இயங்காது - பெட்ரோலிய வணிகர் சங்கம்

நாளை முழு ஊரடங்கு காரணமாக, பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை,

ஜூலை 5, 12, 19, 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்த வித தளர்வும் இல்லாமல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் நாளை முழு ஊரடங்கு காரணமாக, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு வரை பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று பெட்ரோலிய வணிகர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.

மேலும் ஆம்புலன்ஸ், பால் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை வாகன தேவைகளுக்காக மட்டும் விற்பனை செய்யப்படும் என்றும், திங்கள் கிழமை முதல் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல் பங்குகள் இயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்