காரைக்கால்,
வங்க கடலில் உருவான கஜா புயல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலும் பலத்த சேதத்தை உண்டாக்கியது. புயலினால் ஆயிரக்கணக் கான மரங்கள், மின்கம் பங்கள் சாய்ந்தன. வீடுகளின் மேற்கூரைகளும் பறந்தன. 150-க்கும் மேற்பட்ட பட குகள் சேதம் அடைந் தன. இந்த கஜா புயல் விலங்குளையும் விட்டு வைக்கவில்லை.
காரைக்கால் கடலோர கிராம பகுதிகளில் ஏராளமான மான்கள், காட்டுப் பன்றிகள், செந்நாய்கள், குதிரைகள், நரி மற்றும் பறவை ஆகிய விலங்குகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. இதைப் பார்த்து மீனவ மற்றும் கடலோர பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்த கால்நடைத்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கடலோர பகுதியில் பிண மாக கரை ஒதுங்கிய 51 மான்கள், 11 காட்டுப்பன்றிகள், குதிரைகள் உள்ளிட்ட விலங்குகளின் உடல்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். அந்த விலங்குக ளின் உடல்கள் கடலோர பகுதியில் குழிதோண்டி புதைக்கப்பட்டன.
இந்த விலங்குகள் கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை காடுகளில் இருந்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மூழ்கி இறந்து இருக்கலாம் என தெரிகிறது.