தமிழக செய்திகள்

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின்மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஏகாதச ருத்ரஜெபமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கந்தசஷ்டி விழா விமரிசையாக நடக்கிறது. தண்டாயுதபாணி உற்சவர் சிலைக்கு பழங்கள், பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடக்கிறது. 31-ந் தேதி காலை 9 மணிக்கு செட்டிகுளம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஏகாம்பரேசுவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...