சென்னை,
'புனித் சாகர் அபியான்' என்ற பெயரில் கடற்கரைகளை பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப்பொருட்களில் இருந்து தூய்மையாக்குவதற்கான நாடு தழுவிய பிரசாரத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடலோர காவல்படை சார்பில் பிறப்பன்வலசை, அரியமான் ஆகிய இடங்களில் உள்ள பாக்ஜல சந்தி கடல் பகுதியில் பவளபாறைகளில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டன.
இந்த பணியில் கடலோர காவல்படை வீரர்கள் பாதுகாப்பு கவசங்களை அணிந்தபடி ஈடுபட்டனர். இதன்மூலம் பவளபாறையில் தேங்கி கிடந்த ஏராளமான கழிவுகள் அகற்றப்பட்டன.