கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வருகிற 31-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு வினியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.