தமிழக செய்திகள்

கடலூர் கோடை விழாவில் 2 சிறுமிகள் மாயம்

கடலூர் கோடை விழாவில் 2 சிறுமிகள் மாயமானாகள். இதுகுறித்து போலீசா விசாத்து வருகின்றனா.

தினத்தந்தி

கடலூர் திருவந்திபுரம் சாலைக்கரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மனைவி ரேணுகா (வயது 21). இவர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடக்கும் கோடை விழாவையொட்டி சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்வதற்காக சம்பவத்தன்று இரவு தனது அக்காள் மகள்கள் சவுந்தர்யா (9), தாமரைசெல்வி (9) ஆகியோருடன் பெரியார் அரசு கலைக்கல்லூரி அருகில் தங்கியிருந்தார்.

பின்னர் நள்ளிரவில் எழுந்து பார்த்த போது சிறுமிகளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரேணுகா தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களில் சிறுமிகளை தேடி பார்த்தார். இருப்பினும் சிறுமிகள் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரேணுகா, கடலூர் தேவனாம்பட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான 2 சிறுமிகளையும் தேடி வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து