தமிழக செய்திகள்

அரசு பள்ளியில் கோலப்போட்டி

தினத்தந்தி

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நாமக்கல் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 60 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 1,115 கற்போர் பயனடைந்து வருகின்றனர். நேற்று காவேட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயன்பெற்று வரும் 20 பேரை ஊக்குவிக்கும் வகையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த முனியம்மாள், 2-ம் இடம் பிடித்த காசியம்மாள் ஆகியோருக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி, பள்ளி தலைமை ஆசிரியர் கயல்விழி மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அனைவரும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்று பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு