தமிழக செய்திகள்

ஆடுகள் திருடியவர் கைது

ஆடுகள் திருடியவர் கைது செய்யப்பட்டார்

குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60). இவர் காட்டுப்புத்தூரில் உள்ள பொற்கோ என்பவரது ஆடு மாடுகளை மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று ஆடு, மாடுகளை மேய்த்து விட்டு கோட்டகையில் அடைத்து வைத்து இருந்தார். அங்கு புகுந்து சுல்லிபாளையத்தைச் சேர்ந்த கோகுல் (21) என்பவர் ஆடுகளை திருடி சென்றார். அவரை காட்டுப்புத்தூர் போலீசார் கைது செய்தனர். மேலும் ஆலம்பாளையம் புதூரை சேர்ந்த நவீன் (20) என்பவரை தேடி வருகின்றனர்.