தமிழக செய்திகள்

ஆசிரியையிடம் தங்கச்சங்கிலி பறிப்பு

ஆசிரியையிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

தினத்தந்தி

மலைக்கோட்டை:

திருச்சி உறையூர் ராமலிங்க நகர் ராஜேஸ்வரி ரெசிடென்சியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ஹரிணி (வயது 24). இவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த பணியை முடித்துவிட்டு, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடைக்கு தனது தோழி மேனகாவுடன் ஸ்கூட்டியில் சென்றார். சஞ்சீவி நகரை அடுத்த ஒரு ஓட்டல் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ஹரிணி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இது குறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஹரிணி கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்