தமிழக செய்திகள்

இளம்பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: வடமாநில வாலிபர்கள் கைது

நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர்.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் வீராசாமி நகரை சேர்ந்த ரகுபதி என்பவரின் மனைவி சத்யா (வயது33). இவர், நேற்று மாலை எளாவூர் ரெயில் நிலையத்தையொட்டிய தொம்பரை ஆண்டவர் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே நோட்டமிட்டவாறு வந்த 2 வடமாநில வாலிபர்கள் சத்யா அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சத்யா கூச்சலிட்டதால், அங்கிருந்த பொதுமக்கள், தங்கச் சங்கிலி பறித்து கொண்டு தப்ப முயன்ற வட மாநில வாலிபர்கள் 2 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கச் சங்கிலி பறித்த உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அபுஜார் (19), காசிம் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வருவது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்