தமிழக செய்திகள்

சிக்கன் கடையில் மதுவிற்றவர் சிக்கினார்

தினத்தந்தி

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக பாலக்கோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு அருகே கடமடை கிராமத்தில் உள்ள சிக்கன் கடையில் மதுபானங்களை விற்பனை செய்வது தெரிய வந்தது. அவரை பிடித்து விசாரித்ததில் வேடியப்பன் (வயது 24) என்பதும், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. அவரை கைது செய்த பாலக்கோடு போலீசார் அவரிடமிருந்து 20 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து