தமிழக செய்திகள்

வளவனூர் அருகேஅரசு பஸ் கண்ணாடி உடைப்பு2 பேருக்கு வலைவீச்சு

வளவனூர் அருகே அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மர்மநபர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வளவனூர், 

திருச்சி மாவட்டம் ஒரையூரை அடுத்த கண்ணனூர்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டியன் மகன் வேல்முருகன் (வயது 36). இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அதிகாலை கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ்சை ஓட்டிச்சென்றார். இந்த பஸ், வளவனூரை அடுத்த ஆழாங்கால் பஸ் நிறுத்தம் அருகே வரும்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், திடீரென கல்வீசி தாக்கி அந்த பஸ்சின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து பஸ் டிரைவர் வேல்முருகன், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்