தமிழக செய்திகள்

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது - அமைச்சர் துரைமுருகன் பேச்சு

காவிரி விவகாரத்தில் கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தினத்தந்தி

வேலூர்,

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வரும் நிலையில் அணை கட்டும் திட்டத்தை கைவிட கோரி கர்நாடக அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா முதல்-மந்திரியின் கருத்து சரியல்ல. கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு காவிரி வரலாறு குறித்து தெரியவில்லை என்று நினைக்கிறேன். காவிரி விவகாரத்தில் இப்போது வரை கர்நாடகா அரசு தடைக்கல்லாக உள்ளது. காவிரி விவகாரத்தில் இறுதி தீர்ப்பையும் ஏற்று கொள்ளாமல் கர்நாடகா அரசு வாதாடுகிறது" என்று கூறினார். 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு