தமிழக செய்திகள்

அரசுத்துறை டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

அரசுத்துறை டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தினத்தந்தி

தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி டிரைவர்கள் சங்கம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். தர ஊதிய முரண்பாட்டை களைந்து புதிய ஊதிய திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதியத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். டிரைவர்களுக்கு கல்வி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலான பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மேலும் சங்க நிர்வாகிகள்கூறும்போது, வருகிற 22-ந்தேதி சென்னையில் நடைபெறும் கோட்டை நோக்கி பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக தெரிவித்தனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்