தமிழக செய்திகள்

நீட் தேர்வு விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார் அப்போது அவர் கூறியதாவது ;

நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும். தமிழக மாணவர்களின் நலன் கருதி மத்திய அரசுக்கு விரைவில் உரிய பதில் அளிக்கப்படும் மத்திய சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் கேட்ட கேள்விகளுக்கு பதில் தயாராகி உள்ளது..நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தமிழக அரசின் இலக்கு. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி அனுப்பி உள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை