சென்னை,
தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர் இன்றிரவு சென்னை வருகிறார். நாளை மட்டுமே சென்னையில் இருக்கும் கவர்னர், நாளை இரவே மீண்டும் கேரளாவுக்கு கிளம்புகிறார்.
இந்நிலையில் த.வெ.க. அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் த.வெ.க. குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டிவரும் எடப்பாடி பழனிசாமி கவர்னரை சந்திக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவர்னர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. இரண்டு அணியாக உள்ள சூழ்நிலையில் கவர்னரின் சென்னை வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.