தமிழக செய்திகள்

மாதவரத்தில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம்

மாதவரத்தில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கவர்னர் சாமி தரிசனம் செய்தார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த மாதவரம் கல்கட்டா ஷாப் அம்பேத்கர் நகர் பகுதியில் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாதம் 4-வது வாரத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு கூழ் ஊற்றுதலும் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று காலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்துடன் நாக கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். உற்சவர் அம்மனுக்கு கவர்னரே மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார்.

முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்