சென்னை,
அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகாரின் 2-வது பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக நிர்வாகிகள் வழங்கினர். ஆளுநருடனான சந்திப்பின்போது பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.
ஆளுநரை சந்தித்த பிறகு துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது, தமிழக அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் முறைகேடு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றார்.