தமிழக செய்திகள்

புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

வடமாநிலத்தை சேர்ந்த புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 25). இவர் புதுக்கோட்டையில் சாந்தநாதபுரத்தில் ஒரு விடுதியில் தங்கி பெயிண்டர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ஆனந்த் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.