தமிழக செய்திகள்

ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு காவலாளி பலி

ஆவடி அருகே ரெயிலில் அடிபட்டு காவலாளி பலியானார்.

தினத்தந்தி

ஆவடி அடுத்த பட்டாபிராம் அம்பேத்கர் நகர், சோழன் தெருவை சேர்ந்தவர் சிகாமணி (வயது 73). இவர் அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலை இவர் வேலைக்கு செல்வதற்காக பட்டாபிராம் ரெயில் நிலையத்திற்கு செல்ல ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆவடி ரெயில்வே போலீசார் உயிரிழந்த சிகாமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு