சென்னை,
மதுரை ரெயில்வே காவல்துறை டி.எஸ்.பி. மன்னர்மன்னன்,புழல் காவல் உதவி ஆணையாளராக இருந்த போது, பணம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனைக்கு அனுமதி அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டின்படி, தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து ரெயில்வேதுறை ஐ.ஜி. சைலேந்திரபாபு இன்று உத்தரவிட்டுள்ளார்.
டி.எஸ்.பி. மன்னர்மன்னன், நாளை பணி ஓய்வுபெறவுள்ள நிலையில், இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.