தமிழக செய்திகள்

தாத்தா சாமி மடத்தில் குரு பூஜை

ஆம்பூர் அருகே தாத்தா சாமி மடத்தில் குரு பூஜை விழா நடந்தது.

தினத்தந்தி

ஆம்பூர் தாலுகா பாட்டூர் கிராமத்தில் உள்ள பொன்முடி கோடீஸ்வரர் ராமநாத மஹாமடத்தில் பிரம்மகுரு ஸ்ரீ கோடி தாத்தா சுவாமிகளின் குருபூஜை விழா நடந்தது. விழாவையொட்டி கோபூஜை, யாகசாலை பூஜைகள், பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தாத்தா சுவாமிகளுக்கு கலசாபிஷேகம், சங்காபிஷேகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட ஏழு விதமான வில்வங்களால் வில்வாபிஷேகம், கனகாபிஷேகம், புஷ்பாபிஷேகம் ஆகியவை நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.

பக்தர்களுக்கு ஸ்ரீகோடி தாத்தாசுவாமி ஆசிர்வாதம் வழங்கினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்