தமிழக செய்திகள்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க மாவட்டச் செயலாளர் முத்து மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பெருமாள், இணை செயலாளர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், 100 நாள் வேலை திட்ட சம்பள நிலுவைத்தொகையை வழங்குமாறு கூறி கோஷங்கள் எழுப்பினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT