தமிழக செய்திகள்

மாணவிகளுக்கு கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சி

பொள்ளாச்சியில் மாணவிகளுக்கு கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

தினத்தந்தி

பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமையொட்டி மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உடல் நலம், மன நலம் குறித்த கருத்தம் நடந்தது. இதை தொடர்ந்து மாணவிகளுக்கு கைவினைபொருட்களை தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தை மாணவிகள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் தூய்மை இந்தியாவிற்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும் விதைபந்து தூவுதல், யோகா பயிற்சி, சாலை விதிகள் குறித்தும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழி, உதவி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு