தமிழக செய்திகள்

பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி

பரமக்குடியில் பெண்களுக்கு கைத்தறி திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.

தினத்தந்தி

பரமக்குடி, 

பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதிகளில் வசிக்கும் கைத்தறி நெசவாளர் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நபார்டு வங்கி உதவியுடன் பெண்கள் நல அறக்கட்டளை இணைந்து 15 நாட்களுக்கான பயிற்சி நடந்தது. அதில் கைத்தறி நெசவுத்துறையில் புதுமையான தொழில்நுட்பம் சந்தைப்படுத்துதல், கை எம்பிராய்டரி பயிற்சி, மற்றும் புதிய வடிவமைப்பு தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. இதற்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ராமநாதபுரம் முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன், பாரத ஸ்டேட் வங்கி பொது மேலாளர் விஜிலன், பெண்கள் நல அறக்கட்டளை தலைவர் கல்யாணி கார்த்திகேயன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். இதில் 180 பெண்கள் கலந்து கொண்டனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை