தமிழக செய்திகள்

சென்னையில் இருந்து கடலூர் சென்ற அரசு சொகுசு பஸ்சில் ஹவாலா பணம் கடத்திய வாலிபர் கைது

ஹவாலா பணம் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.26 லட்சத்தை பறிமுதல் செய்தனர். #money #kidnapped

தினத்தந்தி

கடலூர்,

கடலூர் ஆல்பேட்டை சோதனைச் சாவடியில் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு சொகுசு பஸ் வந்துகொண்டிருந்தது. அந்த பஸ்சை போலீசார் வழிமறித்து சோதனை செய்தனர்.

அப்போது அந்த பஸ்சில் வந்த வாலிபர் ஒருவரின் பையையும் போலீசார் சோதனையிட்டனர். அந்த பையில் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. மொத்தம் ரூ.26 லட்சம் இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த வாலிபரையும், பணத்தையும் கடலூர் புதுநகர் போலீசில் ஒப்படைத்தனர்.

செல்போன் கடை ஊழியர்

போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சென்னை மண்ணடியை சேர்ந்த காஜா (வயது 27) என்றும், அவர் சென்னையில் ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அப்போது அவருக்கு நண்பரான சென்னை ராயபுரத்தை சேர்ந்த பாரூக் என்பவர் தான் கொடுக்கும் பணத்தை 3 பேரிடம் கொடுத்தால் ரூ.3 ஆயிரம் தருவதாக கூறியதாகவும், அதை நம்பி ரூ.26 லட்சத்தை அரசு சொகுசு பஸ்சில் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அந்த பணத்திற்கான எவ்வித ஆவணமும் அவரிடம் இல்லை.

ரூ.26 லட்சம் பறிமுதல்

அந்த பணத்தை கடலூர் முதுநகரை சேர்ந்த பெருமாள் என்பவருக்கு ரூ.5 லட்சமும், நாகூரை சேர்ந்த ராஜாவுக்கு ரூ.10 லட்சமும், காரைக்காலை சேர்ந்த ஜெயாலுதீனுக்கு ரூ.11 லட்சமும் கொடுப்பதற்காக கொண்டு வந்ததாகவும் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அது ஹவாலா பணம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து காஜாவை போலீசார் கைது செய்து, ரூ.26 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.

அந்த பணம் வருமான வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

சாராயம், மது கடத்தலை தடுப்பதற்காக போலீசார் நடத்திய சோதனையில் வாலிபரிடம் ரூ.26 லட்சம் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்