தமிழக செய்திகள்

தாளவாடி அருகே பலத்த மழை - பெருக்கெடுத்து ஓடிய காட்டாற்று வெள்ளம்...!

தாளவாடி அருகே பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தினத்தந்தி

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் கடும் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து நெய்தாளபுரம், தலலை, கோடிபுரம், திகினாரை, ஏரகனள்ளி, கிருஷ்ணபுரம் போன்ற கிராமங்களில் 1 மணிநேரம் பலத்த மழை பெய்தது.

சுமார் ஒரு மணிநேரம் நீடித்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வனப்பகுதியிலும் நல்ல மழை பெய்தது. நெய்தாளபுரம் பகுதியில் பெய்த மழையால் அங்குள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு