தமிழக செய்திகள்

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பாளையங்கோட்டையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

தினத்தந்தி

சேரன்மாதேவி:

நெல்லை மாநகர காவல்துறை, கோபாலசமுத்திரம் கிராம உதயம் மற்றும் தூய சவேரியார் சமூக பணித்துறை மாணவர்கள் இணைந்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள், துணிப்பைகள் வழங்கும் நிகழ்ச்சியை பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் நடத்தியது.

நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் தலைமை தாங்கி, பேரணியை தொடங்கி வைத்தார். கிராம உதயம் நிர்வாக இயக்குனர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். பகுதி பொறுப்பாளர் முருகன் வரவேற்று பேசினார். ஆலோசனை குழு உறுப்பினர் வக்கீல் புகழேந்தி பகத்சிங், தூய சவேரியார் சமூக பணித்துறை தலைவர் பால்ராஜ், உதவி பேராசிரியர் சகாயராஜ், கிராம உதயம் தலைமை அலுவலகம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளர்கள் சுசிலா, ஆறுமுகத்தாய் ஆகியோர் பேசினார்கள். பேரணியின் போது, நெல்லை மாநகர பகுதி முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் துணிப்பைகள் வழங்கப்பட்டது. இதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். முடிவில், கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் பேச்சியம்மாள் நன்றி கூறினார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்