தமிழக செய்திகள்

வானொலியில் இந்தி தாக்கம்; தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் - கவிஞர் வைரமுத்து டுவீட்

இந்தி அகலாவிடில் அல்லது குறையாவிடில் தமிழ் உணர்வாளர்கள் வானொலி வாசலில் களமிறங்குவோம் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

அகில இந்திய வானொலியின்

தமிழ் நிலையங்கள்

பல கலைஞர்கள்

தமிழ் விளைத்த கழனிகளாகும்;

கலைக்கும் அறிவுக்குமான

ஒலி நூலகங்களாகும்

அங்கே தமிழ் மொழி

நிகழ்ச்சிகள் குறைந்து

இந்தி ஆதிக்கம் தலைதூக்குவது

மீன்கள் துள்ளிய குளத்தில்

பாம்பு தலை தூக்குவது போன்றதாகும்

கண்டிக்கிறோம்

இந்தி அகலாவிடில்

அல்லது குறையாவிடில்

தமிழ் உணர்வாளர்கள்

வானொலி வாசலில்

களமிறங்குவோம்

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து