தமிழக செய்திகள்

குகையில் சமணர் படுகைகளை வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் ஆய்வு

குகையில் சமணர் படுகைகளை வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் ஆய்வு செய்தனர்.

தினத்தந்தி

கரூர் மாவட்டம், புகழிமலையில் சமண முனிவர்கள் தங்கியிருந்த சூடாமணி குகை உள்ளது. அதில் தங்கியிருந்த சமண முனிவர்களுக்காக அமைத்து கொடுக்கப்பட்ட படுகைகள் மற்றும் சேர மன்னரின் கல்வெட்டுக்கள் ஆகியவை உள்ளது. தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ள இந்த வரலாற்று சின்னங்களை கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தினர் அதன் தலைவர் கார்த்திகா லட்சுமி ஏற்பாட்டில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டனர். தீபா தலைமையில், சங்க உறுப்பினர்கள் சமணர் படுகை மற்றும் அதை அமைத்து கொடுத்தவர்களின் பெயர்கள், தமிழ் பிராமி எழுத்தில் அமைந்துள்ள சேர மன்னரின் கல்வெட்டு ஆகியவற்றை ஆய்வு செய்தனர். தொல்லியல் ஆய்வாளர் மைதிலி அதில் உள்ள தகவல்களை படித்து விளக்கமளித்தார். இதில் கரூர் வரலாற்று பாதுகாப்பு சங்கத்தின் பொருளாளர் ராஜஸ்ரீ, சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை