தமிழக செய்திகள்

ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா

ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது.

தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி 45 நாட்கள் நடைபெற்றது. இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை நடைபெற்றது. விழாவுக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமை தாங்கினார். விழாவில் திருச்சி சரக ஊர்க்காவல் படை உதவிச்சரக கோட்ட தளபதி ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். மேலும் பயிற்சி முடித்த ஊர்க்காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கோபிநாத், ஊர்க்காவல் படை கோட்டத்தளபதி ராஜேந்திரன், ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை இசைக் குழுவினர், ஊர்க்காவல் படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட ஊர்க்காவல் படை மண்டலத் தளபதி அழகுமணியன் வரவேற்று பேசினார். முடிவில் ஊர்க்காவல் படை உதவி ஆய்வாளர் கவிதா நன்றி கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து