தமிழக செய்திகள்

ஓசூர்: 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்; 4 பேர் பலி

வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கி கொண்டது.

தினத்தந்தி

ஓசூர்,

ஓசூரில் 4 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 4 பேர் பலியானார்கள். ஓசூரில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வாகனம் மீது, பிக்கப் வேன் ஒன்று மோதியது. இந்த சம்பவத்தின்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று அதன் பின்னால் மோதி விபத்திற்குள்ளானது.

அப்போது, சரக்கு லாரி ஒன்று வந்துள்ளது. அது ஏற்கனவே விபத்தில் சிக்கியிருந்த வாகனங்கள் மீது மோதியது. இதில், வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கி கொண்டது.

இந்த சம்பவத்தில் காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். மற்ற நபர்கள் பற்றிய விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை. விபத்து பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து