தமிழக செய்திகள்

டாக்டரை தாக்கிய ஓட்டல் ஊழியர் கைது

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டரை தாக்கிய ஓட்டல் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் மாலைப்பட்டியை சேர்ந்த ஜோசப் மகன் ஜோஸ்வா (வயது 23). ஓட்டல் ஊழியர். நேற்று முன்தினம் இரவு இவரை சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த ஜோஸ்வா, திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது பணியில் இருந்த டாக்டரிடம் வாக்குவாதம் செய்ததோடு, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில், திண்டுக்கல் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை கைது செய்தனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை