சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி சோளிங்கரில் மனித சங்கிலி போராட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் உதயகுமார், நகர தமிழர் வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த மருத்துவர் சுதாகர், மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் நூருல்லா உள்பட பலர் பஸ்நிலையத்திலிருந்து அண்ணாசிலை வரை கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர்.