தமிழக செய்திகள்

மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர், கொடைக்கானலில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர் பஸ்நிலையம் முன்பு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பக்ருதீன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவத்தை கண்டித்து கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மனித நேய மக்கள் கட்சி சார்பில், கொடைக்கானலில் மேற்கு மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல்லா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை