தமிழக செய்திகள்

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டனர்.

தினத்தந்தி

கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட கம்மார்பாளையம் கிரமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்சார வாரிய ஊழியர் மாசி (வயது 62). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இவர்கள் 2 பேரும் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10-ந் தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி 2 பேரும் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்