தமிழக செய்திகள்

தமிழக அரசின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கூடுதல் தலைமைச் செயலாளராக அந்தஸ்து உயர்வு

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் எஸ்.விஜயகுமார், சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன் ஆகியோர் முதன்மைச் செயலாளர் நிலையில் இருந்து கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி