தமிழக செய்திகள்

திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை

திருக்கடையூரில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க உடனடி நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு, விவசாயிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்தனர்.

தினத்தந்தி

பொறையாறு:

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராமமூர்த்தி, கலெக்டர் மகாபாரதியிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:- தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஆய்வு செய்ய வந்த மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியிடம் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த கோரிக்கை மனு அளித்தேன். அவர் உடனடியாக தீர்வு காணும் வகையில் பன்றிகள் கூட்டமாக சுற்றித்திரியும் திருக்கடையூர் ஆனைகுளம் பகுதிக்கு விரைந்து சென்று, பன்றி வளர்போரை அழைத்து பட்டி அமைத்து பாதுகாப்பாக வளர்க்க வேண்டும். இதை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். மனு கொடுத்ததும் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட கலெக்டர் மகாபாரதிக்கு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் நன்றியும், பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு