தமிழக செய்திகள்

சாராயம் காய்ச்சியவர் சிறையில் அடைப்பு

சாராயம் காய்ச்சியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினத்தந்தி

ஆலங்குடி அருகே சாராய ஊறல் போட்டு இருப்பதாக ஆலங்குடி மது விலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆலங்குடி அருகே கருக்காக்குறிச்சி தெற்கு தெரு பகுதியில் முத்துசாமி மகன் வீரையா (வயது 45) என்பவர் சோள தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக சுமார் 500 லிட்டர் ஊறல் வைத்திருந்ததை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் 10 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்து வீரையாவை கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.  

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்