தமிழக செய்திகள்

இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது - மு.க.ஸ்டாலின்

இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

மதுரை,

மாவட்டம் தோறும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் கட்சி நிகழ்ச்சிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் மதுரையில் உள்ள சிம்மக்கல் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் சிலை அமைக்க அரசு பல்வேறு தடைகளை விதித்தது. சட்ட போராட்டம் நடத்தி மதுரையில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டுள்ளது. கருணாநிதி சிலையை திறக்க சட்ட போராட்டம் நடத்திய அனைவருக்கும் நன்றி. இன்னும் 3 மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப்போகிறது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்