தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க உத்தரவு

தமிழ்நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை

இது தொடர்பாக அனைத்து கூட்டுறவு சங்க பதிவாளர்களுக்கும் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நசிமுத்தின் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். புகார்களை இணையவழியில் தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதாக புகார்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரமங்களை குறைக்கும் வகையில் அந்தந்தக் கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கும் வகையில் புகார் பதிவேட்டை வைக்கவேண்டும் எனவும், தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்