தமிழக செய்திகள்

"சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது" - மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் ஒரு வாரத்திற்கு பின் கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட உள்ளது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சென்னையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் , 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது .

இந்நிலையில் சென்னையில் ஒரு வாரத்துக்குப் பின் இன்று, கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. தட்டுப்பாடு காரணமாக கோவாக்சின் போடப்படாத நிலையில், ஒரு மையத்தில் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் 100 பேருக்கும், நேரடியாக வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் 100 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இது இரண்டாம் தவணை செலுத்துபவர்களுக்கு மட்டுமே போடப்படும் என்றும் மாநகராட்சி கூறியுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்